செய்தி

ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் செயற்பாட்டை ஆரம்பிக்கும் E3 நாடுகள்!

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஈரான் மீது ஐ.நா. தடைகளை மீண்டும் விதிக்கும் செயல்முறையை நாளைய தினம் (28.08) தொடங்க வாய்பிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில் 30 நாட்களுக்குள் தெஹ்ரான் தனது அணுசக்தி திட்டம் குறித்த உறுதிமொழிகளை வழங்கும் என்று நான்கு இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு உலக வல்லரசுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் நீக்கப்பட்ட தெஹ்ரான் மீதான தடைகளை அக்டோபர் நடுப்பகுதியில் மீட்டெடுக்கும் திறனை இழப்பதற்கு முன்பு, அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்படி மூன்று நாடுகளும் முன்னெடுத்து வருகின்றன.

மூன்று ஐரோப்பிய இராஜதந்திரிகளும் ஒரு மேற்கத்திய இராஜதந்திரியும் ஈரானிடமிருந்து போதுமான உறுதியான உறுதிமொழிகள் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையிலேயே பொருளாதார தடைகளை விதிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!