இலங்கை செய்தி

தீர்மானங்களை விமர்சிக்க வேண்டாம்!! சஜித் விடுத்துள்ள எச்சரிக்கை

கர்வம் கொள்ளாமல் கட்சியை வீழ்த்த வேண்டாம் என்றும் சமகி ஜன பலவேகவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிர்வாக சபையில் எடுக்கப்படும் தீர்மானங்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படும் எனவும் நேரடியாக தீர்மானங்களை எடுப்பதில் எவருக்கும் அஞ்சப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமகி ஜன பலவேகய கட்சி தலைவருக்கு சொந்தமானது அல்ல, உறுப்பினர்களுக்கு சொந்தமான கட்சி என்றும், அதனை தலைவர் என்ற முறையில் வெற்றி பெறும் நிலைக்கு கொண்டு வருவது தமக்கு சவாலாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கட்சி பலம் இல்லை என தம்பட்டம் அடிப்பதை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை கட்டியெழுப்ப வேண்டும் எனவும், கட்சியை சேர்ந்த சிலர் தாய், தந்தையரை திட்டியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content