வட அமெரிக்கா

மீண்டும் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ள டொனால்ட் டிரம்ப்

ஆவணங்கள் அற்ற குடியேற்றவாசிகளின் பிள்ளைகளிற்கு அமெரிக்க பிரஜாவுரிமையை வழங்கும் சட்டத்தை இரத்துச்செய்வேன் என மீண்டும் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளார் அமெரிக்காவின் முன்னாள் டொனால்ட் டிரம்ப் .

125வருடங்களிற்கு முன்னர் அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதி செய்த சட்டத்தை தான் ஜனாதிபதியானால் அகற்றுவேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில்,நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அன்றைய தினமே ஆவணங்கள் அற்ற குடியேற்றவாசிகளின் பிள்ளைகளிற்கு அமெரிக்க பிரஜாவுரிமை கிடைப்பதை தடுப்பதற்கான உத்தரவில் கைச்சாத்திடுவேன் எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.

குடியேற்றவாசிகளிற்கு எதிரான கருத்துக்களை மீண்டும் வெளியிட ஆரம்பித்துள்ள ட்டிரம்ப் , சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஊக்குவிக்கின்ற முக்கியமான விடயத்தை நிறுத்துவேன் அதிகளவு குடியேற்றவாசிகள் அமெரிக்காவிற்குள் வருவதை தடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

அதேவேளை பிறப்புரிமை குடியுரிமை என்பது அமெரிக்க அரசமைப்பில்இடம்பெற்றுள்ளது.அமெரிக்காவில் பிறந்தவர்கள் அல்லது குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் அதன் அதிகார வரம்பிற்குள் உட்பட்டவர்கள் அனைவரும் அமெரிக்காவின் குடிமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!