இலங்கை

யாழில் இடம்பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்வு

பொலிஸ் அதிகாரிகள் என்ற ரீதியில் ஊடகவியலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது எப்படி அதே நேரம், பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளை நிறைவேற்றுவது எப்படி எந்த முறையில் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிகால் தல்துவே கருத்து தெரிவித்துள்ளார்.

வடமாகாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடன், பொலிஸார் ஊடகங்களுடனும் பொதுமக்களுடனும் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி தவிர்ப்பது என்பது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிகால் தல்துவேயினால் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்தார் அவர்.

வெவ்வேறு தரப்புக்கள் இருக்கின்ற படியால், அத்தரப்புக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படாத வகையில் இரு தரப்பினருக்கும் இடையே பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுறுத்தல்களை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் தெரிவித்தமைக்கு அமைவாக யாழ்ப்பாணம், காங்கேசன்துறை முல்லைத்தீவு, மன்னார், போன்ற பகுதிகளில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதால் இந்த கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

See also  ஜனாதிபதியின் எதிர்ப்பை மீறி துப்பாக்கி துளைக்காத கார்

சமூகத்துடன் நேரடியாக தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டால் சமூகத்திற்கு உதவியாக இருக்கும். அதேநேரம், பொலிஸாரின் கௌரவத்திற்கும் முக்கியமானதாக இருக்கும்.

போராட்டங்களை தடுக்கும் போது, முரண்பாடான நிலையை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.. உண்மையில், அவ்வாறான நிலையை ஏற்படுத்திக் கொள்ள முடியாது. ஊடகவியலாளர்கள் சமூக சேவை செய்கின்றார்கள். பொலிஸாரும் 24 மணி நேரம் கடமையில் இருப்பதனால் இரு தரப்பினருடைய சேவைகளும் சமூகத்திற்கு அவசியமானது.

இந்த விடயங்களை உணர்ந்து செயற்படும் போது அந்தந்தத் தரப்பினர்களிடையை பிரச்சினைகளையும், முரண்பாடுகளையும் தீர்த்து கொள்ள முடியும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content