பிரிஜிட் மக்ரோன் தொடர்பில் அவதூறு கருத்துக்கள் – வழக்கு விசாரணை இன்று!
பிரான்ஸின் முதன் பெண்மணியான பிரிஜிட் மக்ரோன் தொடர்பில் ( Brigitte Macron) இணையவழியில் தவறான தகவல்களை பரப்பிய 10 குற்றவாளிகளுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
குற்றவாளிகள் பிரிஜிட் மக்ரோனின் பாலினம் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 41 தொடக்கம் 60 வயதுடைய எட்டு ஆண்களும், இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் அப்போது பிரிஜிட் மக்ரோன் Brigitte Macron) நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இந்நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேற்படி தவறான கருத்துக்கள் பிரிஜிட் மக்ரோனின் உடல்நலத்தை பாதித்ததோடு, அவருடைய குடும்ப வாழ்க்கை மற்றும் பேரப்பிள்ளைகள் வரை தாக்கம் செலுத்தியதாக அவருடைய மகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





