இலங்கை செய்தி

மலேசியவில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கையர் மரணம்

மலேசியாவின் செந்தூலில் மூன்று இலங்கையர்களைக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தம்பதியின் கணவர் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அல்லுடின் அப்துல் மஜிட் இன்று (02) தெரிவித்தார்.

இரண்டு பிரதான சந்தேக நபர்களுக்கு கொலைகளை செய்வதற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் மேலும் மூன்று இலங்கையர்களும் பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்திய போது கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு முக்கிய சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்ததாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ அல்லுடின் அப்துல் மஜிட் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அப்துல் மஜித், உயிரிழந்த இலங்கையர் தவிர மேலும் ஆறு இலங்கையர்களும் பாகிஸ்தானியர் ஒருவரும் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அல்லுடின் அப்துல் மஜிட் குறிப்பிட்டுள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!