இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்: தயாசிறி அறிவிப்பு

கோரிக்கை விடுக்கப்பட்டால் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இலங்கையின் அனைத்து சமூகத்தினராலும் தமக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தான் இணக்கமான நிலையில் இருப்பதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.

“எனக்கு எந்த கட்சியுடனும், சமூகத்துடனும் விரோதம் இல்லை. நான் எல்லோரையும் நேசிக்கும் நபர். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நான் தேர்தலில் வெற்றி பெறுவேன், ”என்று அவர் மேலும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் இந்த வாரம் (மார்ச் 20) புதிய அரசியல் கூட்டணியும் ஆரம்பிக்கப்பட்டது.

‘மனிதநேய மக்கள் கூட்டணி’ என அடையாளப்படுத்தப்பட்டுள்ள புதிய அரசியல் பிரிவு கிட்டத்தட்ட 20 அரசியல் மற்றும் சிவில் சமூக குழுக்களைக் கொண்டுள்ளது.

(Visited 23 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!