இந்தியா

காதல் திருமணம் செய்த மகளை கொலை செய்த தந்தை: ஆந்திராவில் கொடூரம்!

குடும்ப எதிர்ப்பைமீறி காதல் திருணம் செய்துகொண்ட யுவதி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது.

ஆந்திராவின் மச்சேர்லா நகரைச் சேர்ந்த சவ்டேஸ்வரி (வயது 22) குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் 4 ஆம் திகதி காதல் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் மகள் சவ்டேஸ்வரியை காணவில்லை என அவரது தந்தை, மச்சேர்லா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து தேடுதல் நடத்திய பொலிஸார் கடந்த மாதம் 15 ஆம் திகதி சவ்டேஸ்வரியை கண்டுபிடித்தனர்.

காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர், யுவதியை மிரட்டி, பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

அவ்வாறு நடந்து மூன்று நாட்களுக்குப் பின் சவ்டேஸ்வரி தனது பெற்றோர் வீட்டில் இறந்துவிட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் கூறினார்.

எனினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் சவ்டேஸ்வரி தற்கொலை செய்யவில்லை என்றும், தலையணையை வைத்து முகத்தில் அழுத்தியதால், அவர் மூச்சுத் திணறி இறந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சவ்டேஸ்வரியின் தந்தை சந்திர சீனு மற்றும் உறவினர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் சவ்டேஸ்வரியின் குடும்பத்தினரை காப்பாற்ற பொலிஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் பெற்றிருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!