ஐரோப்பா

பிரித்தானியா நோக்கி ஆபத்தான பயணம் – தடுத்து நிறுத்தப்பட்ட 98 பேர்

பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 98 பேர் தடுத்து நிறுத்தப்பட்டு கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

பிரான்ஸின் பா-து-கலேயில் இருந்து ஆங்கிலக்கால்வாய் ஊடாக இவர்கள் பயணிக்க முயற்சித்துள்ளனர்.

திங்கட்கிழமை அதிகாலை இரு வேறு படகுகளில் அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர்.

முதலாவது படகில் 66 பேர் பயணித்துள்ள நிலையில் – கடற்பயணங்களை கண்காணிக்கும் CROSS எனும் அமைப்பினர் அவர்களைக் கண்டறிந்து கடலில் இருந்து மீட்டனர்.

பின்னர் சில நிமிடங்கள் கழித்து 32 பேருடன் பயணித்த மற்றுமொரு படகினை தடுத்து நிறுத்தினர்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியா நோக்கி 11 படகுகளில் 700 அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணித்திருந்ததாகவும், அதில் இருவர் பலியானதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

(Visited 25 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்