இலங்கை

கனடாவிலிருந்து இலங்கைக்கு வந்த ஆபத்தான பொருள்! கைப்பற்றிய சுங்க அதிகாரிகள்

கொழும்பு, பேலியகொடயிலுள்ள களஞ்சியம் ஒன்றில் பணிபுரியும் சுங்க அதிகாரிகள் குழுவொன்று ‘குஷ்’ என அழைக்கப்படும் அமெரிக்க கஞ்சாவை இன்று கைப்பற்றியுள்ளது.

இந்தக் கஞ்சா இரண்டு மரப்பெட்டிகளில் மறைத்து கனடாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக அந்த அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில் குறித்த மரப்பெட்டிகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முகவரியிடப்பட்டிருந்த இந்தப் பெட்டிகளைத் திறந்து பார்த்தபோது அவற்றில் அமெரிக்க கஞ்சா காணப்பட்டதகையடுத்து அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!