பிரித்தானியாவை நெருங்கி வரும் ஆபத்து : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பருவத்தின் முதல் பெயரிடப்பட்ட புயல் இந்த வார இறுதியில் இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தை தாக்கும் என வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆஷ்லே புயலால் 80 கி.மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் மழையுடன் கூடிய வானிலை நிலவும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இதனால் முழு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து மற்றும் வடமேற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மின் வெட்டுக்கு வாய்ப்புள்ளதாகவும், உயர் ஆபத்துக்கள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரித்தானியர்கள் தங்களை தற்காத்து கொள்ள தேவையான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
(Visited 10 times, 10 visits today)