வசூலில் சாதனை படைத்த சுங்கத் திணைக்களம்: ஜனாதிபதி பாராட்டு!
இலங்கை சுங்கத் திணைக்கள வரலாற்றில் 2025 ஆம் ஆண்டில் அதிக வருமானத்தை பெறப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்கான 2,115 பில்லியன் ரூபா வருமானத்தை தாண்டி, 300 பில்லியன் ரூபா மேலதிக வருமானம் பெறப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் எஸ்.பீ அருக்கொட மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) முற்பகல் சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
நாட்டுக்கு அவசியமான வருமானத்தை ஈட்டித்தந்து, பொருளாதார மற்றும் சமூக நிலைபேற்றை உருவாக்க இலங்கை சுங்கத் திணைக்களம் வழங்கிய பங்களிப்பை இதன்போது ஜனாதிபதி பாராட்டினார்.
இலங்கை சுங்கத்திணைக்களத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை மற்றும் முன்னேற்றம், 2026 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
அது குறித்த புதிய ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.





