இலங்கை

ரணிலுக்கு நெருக்கடி – பசிலுக்கு அழுத்தம் கொடுக்கும் பிரபல அரசியல்வாதிகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யோசனைகளை வருட வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்படாவிடின் அதற்கு ஆதரவளிப்பது குறித்து இருமுறை சிந்திக்க வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களுக்கு சேவையாற்றுவதற்காக வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தமது கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் இதற்கு முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் ஜனாதிபதி அதனைச் செய்யத் தவறியதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே குறைந்தபட்சம் அந்தந்த அமைச்சர்களின் பிரேரணையாவது வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாவிட்டால் கிராமங்களுக்குச் சென்று மக்களை எதிர் கொள்ள முடியாத நிலை ஏற்படும் என பசில் ராஜபக்ஷவிடம் அவர்கள் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்குமாறும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!