இலங்கை

இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்க்க சதி முயற்சி!

பாராளுமன்றில் நடைபெறவுள்ள முக்கிய வாக்கெடுப்பின்போது அரசாங்கத்தை கவிழ்க்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அரசியல்வாதியொருவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்படாது என அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், சிங்கள ஊடகம் ஒன்று குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

அமைச்சுப் பதவிகளை கோரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு தனியான குழுவொன்றை அமைத்து பொறுப்புக்களை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளபோதிலும் அவர்கள் அந்த பதவிகளை ஏற்கவில்லை எனவும் தெரியவருகிறது.

தாழ்ந்த பதவிகளை ஏற்க விரும்பவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!