உலகம் ஐரோப்பா செய்தி

நத்தார் தினத்தில் பிரித்தானியாவை வாட்டும் கடும் குளிர் – முதியவர்களுக்குச் சுகாதாரத்துறை எச்சரிக்கை

பிரித்தானியாவின் தென்மேற்குப் பகுதிகள் மற்றும் வேல்ஸில் இன்று கடும் காற்றுடன் கூடிய குளிரான வானிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 65 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மின்சாரம் மற்றும் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் சுகாதாரத்துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பனிப்பொழியுடன் கூடிய ‘வெள்ளை நத்தார்’ (White Christmas) அமையும் என மக்கள் எதிர்பார்த்திருந்த போதிலும், இம்முறை வறண்ட மற்றும் குளிரான வானிலையே நிலவுகின்றது.

இதேவேளை, நத்தார் விடுமுறைப் பயணங்கள் அதிகரித்துள்ள நிலையில், M2 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் லண்டன் நோக்கிய போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டது.

மேலும், பராமரிப்புப் பணிகளுக்காக M27 நெடுஞ்சாலை ஜனவரி 4-ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், வாகனங்களைச் சரிபார்த்துப் பயணங்களைத் தொடருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!