ஸ்பிராட்லி தீவுகள் மீது உரிமை கோரல் – நடுக்கடலில் மோதிக்கொண்ட சீனா, பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படைக்கு சொந்தமான படகு தங்கள் படகு மீது வந்து மோதியதாக சீனா கடலோர காவல்படை வீடியோ வெளியிட்டுள்ளது.
தென் சீன கடலில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய ஸ்பிராட்லி தீவுகள் பகுதியில், படகு மீது வந்து மோதியதாக தெரிவித்துள்ளது.
அதே சமயம், சீன படகு தான் தங்கள் படகு மீது வந்து மோதியதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
இயற்கை வளங்களுக்கு பெயர் பெற்ற ஸ்பிராட்லி தீவுகளை சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தைவான் ஆகிய 4 நாடுகளும் உரிமை கோரிவருகின்றன.
கடந்த மாதம் மட்டும், பிலிப்பைன்ஸ் மற்றும் சீன கடலோர காவல்படை இடையே அங்கு 5 முறை மோதல்கள் நடந்துள்ளன.
(Visited 10 times, 1 visits today)





