இலங்கை செய்தி

இலங்கையின் வடபகுதி மக்களுக்கு ஆதரவளிக்கும் சீனா

வடபகுதி மக்களுக்கான நிவாரணங்களை சீன அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் திரு.சி.சென் ஹொன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வடக்கு பகுதிக்கு விஜயம் செய்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்.மதத் தலைவர்களைச் சந்தித்த சீனத் தூதுவர் யாழ்.மாவட்டச் செயலகத்தில் வடக்கிலுள்ள மீனவர்களுக்கு உலர் உணவு மற்றும் மீன்பிடி உபகரணங்களை மக்களுக்கு வழங்கினர்.

பின்னர் யாழ்.மாவட்டத்தில் உள்ள பல தொல்பொருள் இடங்களுக்கு கண்காணிப்புப் பயணத்தையும் மேற்கொண்டார்.

பின்னர் மன்னாரில் இராணுவத்தினரின் பங்களிப்புடன் மன்னாரில் மீள்குடியேறிய மீனவர் குடும்பங்களுக்கு உலர் உணவு மற்றும் மீன்பிடி சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சீன அரசாங்கத்திடமிருந்து வசதிகளை வழங்குவதற்கான ஆரம்ப கட்டமாக, எதிர்காலத்தில் மேலும் பல சலுகைகளை வழங்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் சென் ஹான் மேலும் தெரிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content