ஆசியா செய்தி

சீனாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்கு சிறுவர்களுக்கு கட்டுப்பாடு

கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையப் பாவனைக்கு சிறுவர்கள் அடிமையாவதில் சீன அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு சிறுவர்கள் இணையம் மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதற்கு சீன அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதிய கட்டுப்பாடுகளின்படி, சீனாவில் குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 02 மணிநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

16 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட பயனர்களுக்கு நாளொன்றுக்கு 02 மணிநேரமும், 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு ஒரு மணித்தியாலமும், 08 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 08 நிமிடங்களும் வரம்பு விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டு சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!