கொழும்பில் களமிறங்கினார் இந்திய இராணுவத் தளபதி!
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி Upendra Dwivedi, இலங்கை வந்துள்ளார்.
அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை இராணுத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. டோலகே Major General D.K.S.K. Dolage வரவேற்றார்.
இந்திய தூதரக அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே இவரது விஜயம் அமைந்துள்ளது.
இந்திய இராணுவத் தளபதி, இலங்கையின் மூத்த இராணுவ மற்றும் அரசு அதிகாரிகளைச் இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன், பாதுகாப்பு பிரதி அமைச்சரவையும் சந்திக்கவுள்ளார்.
இலங்கையில் சந்திப்புகளை நடத்திய பின்னர் நாளை இந்திய இராணுவத் தளபதி தாயகம் திரும்புவார்.





