இலங்கை

சேனல் -04 காணொலி : தம்மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து கோட்டாபய விளக்கம்!

2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் கோட்டாபய ராஜபக்ஷ மறுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இதே சேனல் ஒளிபரப்பிய முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் முழுமையான பொய்களால் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது ஐரோப்பாவில் தஞ்சம் கோரும் வகையில் ஹன்சீர் ஆசாத் மௌலானா,  மற்றும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலிய வெளியிட்ட பொய்யான கருத்துகள் எனவும்,  2015ஆம் ஆண்டு பாதுகாப்புச் செயலர் பதவியை விட்டு விலகி தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் வரை மேஜர் ஜெனரல் சாலேவுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும்  கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் மேஜர் ஜெனரல் சலே சேனல் 4 க்கு அறிவித்த அனைத்தும் முன்னுக்கு பின் முரணாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சேனல் 4 இன் இந்த சமீபத்திய ஆவணப்படம் பெரும்பாலும் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவே அமைகிறது என சுட்டிக்காட்டியுள்ள அவர், யுத்தம் நிறைவடைந்த பின் தான் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content