இலங்கை செய்தி

இலங்கையில் வாகன விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பம் செய்வதற்கான கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

அதேபோன்று வாகனங்களை இறக்குமதி செய்யும்போதும் வாகனத்தின் விலையில் மாற்றம் ஏற்படுமா அல்லது அதிகரிப்பு ஏற்படுமா என்பது தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

வாகன இறக்குமதி செய்யும் பொழுது விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்படக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மான்னகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 4 கட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொதுப் போக்குவரத்து வாகனங்கள் முதலாவதாகவும், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளை இரண்டாவதாகவும் இறக்குமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது .

அதன் பின்னர் சாதாரண கார்கள் மற்றும் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்த உள்ளது.

வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் அமைச்சருக்கு இடையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது .

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!