மின் கட்டண அதிகரிப்பை கோரும் இலங்கை மின்சார சபை
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையினால்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மின்சாரக் கட்டணத்தை 13.56% ஆல் அதிகரிக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக இந்த மின்சாரக் கட்டணத் திருத்தக் கோரிக்கையை
இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ளது.





