இலங்கை

விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு ஜுனில் விசாரணைக்கு!

விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு விசாரணை வரும் ஜுன் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், சட்டவிரோதமான முறையில் 75 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை சம்பாதித்தாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து லஞ்ச ஊழல் ஆணைக்குழு இது சம்பந்தமான வழக்கினை தொடர்ந்த நிலையில், அதற்கு விமலின் வழக்கறிஞர் முதற்கட்ட ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில்  இது தொடர்பான வாதங்களை ஜூன் மாதம் 16ஆம் திகதி முன்வைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று திங்கட்கிழமை (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிரதிவாதி விமல் வீரவன்சவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!