இலங்கை

தனியார் துறையில் வேலை வாய்ப்ப்பினை பெற்றுக்கொடுக்கும் தொழில் சந்தை! இளைஞர் யுவதிகள் பங்கேற்பு

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இளைஞர் யுவதிகளுக்காக தனியார் துறையில் வேலை வாய்ப்ப்பினை பெற்றுக்கொடுக்கும் தொழில் சந்தையானது நேற்று (29) நடாத்தப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த தொழில் சந்தையினை மனிதவலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் சேவை துறை, விருந்தினர் விடுதி, தனியார் வைத்தியசாலை , நிதிசார் நிறுவனங்களின் வெற்றிடங்கள், வெளிக்கள உத்தியோகத்தர் வெற்றிடங்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பற்றிய ஆலோசனைகள் போன்ற துறைகளுக்கான நேர்முக தேர்வுகள் இடம் பெற்றதுடன் இதில் சுமார் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன.

வேலை வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின் தகைமைகளுக்கு ஏற்ப துறை சார் தொழில்களை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், மனிதவலு வேலை வாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,நிறுவனங்களின் உத்தியோகத்தர் இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content