இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உரிமையாளர் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்

எல்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வந்து கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உரிமையாளர் இன்றி நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த Nissan Bluebird கார் கடந்த மே மாதம் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் விடப்பட்டது.

இந்தக் கார் அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்குச் சொந்தமானது என்பதும், தற்போது பலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு இலக்கம் 68390க்குத் தேவையான கார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில்,  எல்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு நீதிமன்ற உத்தரவின் பேரில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து இந்த காரை எடுத்துச் சென்றுள்ளார்.

(Visited 47 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!