இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

பாதீட்டு பற்றாக்குறை 1,757 பில்லியன் ரூபா!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வரி, மானியங்கள் உள்ளடங்களாக மொத்த வருமானமாக 5,300 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டெழும் செலவீனம், வட்டி உட்பட மொத்த செலவீனமாக 7,057 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய 1,757 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது மொத்த தேசிய உற்பத்தியில் 5.1 சதவீதமாக இருக்கும்.

அடுத்த வருடம் 4 – 5 சதவீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அரச வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 15.3 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

2028 ஆம் ஆண்டில் வெளிநாட்டு கடனை பெறுவதற்குரிய இயலுமையை இலங்கை பெறும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய திட்டங்களும் உள்ளன.

நிதி அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த படியாக பாதுகாப்பு அமைச்சுக்கும், சுகாதார அமைச்சுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்தது எனவும், வரி அதிகரிப்பு இடம்பெறவில்லை என ஆளுங்கட்சியினரும் கூறிவருகின்றனர்.

அதேபோல ஜனாதிபதி நீண்டநேரம் உரையாற்றி இருந்தாலும் புதிய அரசமைப்பு மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என எதிரணி சுட்டிக்காட்டியுள்ளது.

(Visited 5 times, 5 visits today)

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!