இலங்கை

கல்கிஸ்ஸயில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு – பல பெண்கள் கைது

கொழும்பு புற நகர பகுதியில் இயங்கி வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் விடுதியின் முகாமையாளர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கல்கிஸ்ஸ, விஜேசிறிவர்தன மாவத்தை பகுதியில் ஆயுர்வேத சேவை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் நிலையத்தின் முகாமையாளர் உட்பட 9 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 43 வயதுகளுடைய மித்தெனிய, கஹடகஸ்தென்ன, தன்கந்த, மதவச்சி, புத்தள,மொரட்டுவ, பொத்துவில் ரக்வான, இரத்மலானை மற்றும் வாதுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

  • சந்தேக நபர்கள் அனைவரும் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்