இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

ரஷ்யாவை எச்சரித்த பிரித்தானிய இராணுவம்!

ரஷ்யாவின் இராணுவம் ஐரோப்பாவிற்குள் நுழைந்தால் அவர்களுக்கு எதிராக பிரித்தானிய இராணுவம் களமிறங்கும் என அந்நாட்டின் பாதுகாப்புப் படையின் துணைத் தலைவர் ரொப் மகோவன் (Rob Magowan) தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகள் தங்களது ஆயுதங்களை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கியதையடுத்து, போர் நிலைமை தீவிரமடைந்துள்ளது.

மேற்கத்தைய ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைனால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயக் கூடிய ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்தியிருந்தது.

அத்துடன், உக்ரைனுக்கு உதவ முன்வரும் மேற்கத்தைய நாடுகளையும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்திருந்தார்.

இந்நிலையிலேயே, புடினின் படைகள் ஐரோப்பிய நிலப்பரப்பை ஆக்கிரமித்தால் அவர்களை தடுப்பதற்கு பிரித்தானிய இராணுவம் களமிறங்கும் என ரொப் மகோவன் எச்சரித்துள்ளார்.

மேலும், பிரித்தானிய படைகள் தாக்குதல் நடத்துவதற்கு எந்நேரத்திலும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

(Visited 68 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி