தென் அமெரிக்கா

பிரேசில் : இறந்த பட்டாம்பூச்சியை ஊசி மூலம் செலுத்திக் கொண்ட சிறுவன் உயிரிழப்பு!

ஆன்லைன் சவாலுக்காக” இறந்த பட்டாம்பூச்சியை ஊசி மூலம் செலுத்திக் கொண்ட 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

பிரேசிலிய மாநிலமான பஹியாவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. டேவி நூன்ஸ் என அழைக்கப்படும் குறித்த சிறுவன் தொடர்ச்சியாக வாந்தி எடுத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறந்த பட்டாம்பூச்சியை தண்ணீரில் கலந்து, பின்னர் அந்த திரவத்தை தனது வலது காலில் செலுத்தியதாக மருத்துவர்களிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, அவர் உடல்நிலை மோசமடையத் தொடங்கியதால், கடந்த புதன்கிழமை மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமான விட்டோரியா டா கான்கிஸ்டாவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் எந்த வகையான பட்டாம்பூச்சியைத் தேர்ந்தெடுத்தார் என்பதை குறிப்பிடவில்லை.

போலீசார் இப்போது முழு பிரேத பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 32 times, 1 visits today)

VD

About Author

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த
error: Content is protected !!