இலங்கை

இலங்கையில் வீடொன்றிலிருந்து தம்பதியினரின் சடலங்கள் மீட்பு!

பொகவந்தலாவ – தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், குறித்த பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வருகைதந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்ட இருவரும் கணவன் மனைவி எனவும் குறித்த இருவரும் கடந்த 14ஆம் திகதி உயிரிழந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

அத்துடன், சடலங்களுக்கு அருகில் நஞ்சு போத்தல் ஒன்றும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

சடலமாக மீட்கப்பட்ட கணவன் 38வயதுடையவரெனவும் மனைவி 37 வயதுடையவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்