யமுனை ஆற்றில் கவிழ்ந்த படகு: 9 பேர் பலி
இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் மதுராவில் உள்ள யமுனை ஆற்றில் 20 இற்கும் அதிகமானோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், யமுனை ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




