இந்தியா செய்தி

பீகாரின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர்

சமீப ஆண்டுளாக மாற்றுப் பாலினத்தவர்களுக்கான அங்கீகாரம் மற்றும் கௌரவத்தை அரசாங்கமும் சில தனியார் அமைப்புகளும் வழங்கி வருகிறது.

பீகார் மாநிலம் பாகல்பூரில் வசிக்கும் மான்வி மது கைஷ்யப் என்ற திருநங்கை சப் இன்ஸ்பெக்டருக்கான தேர்வு எழுதி, அதில் வெற்றிப்பெற்று முறையாக பீகார் மாநிலத்தின் சப் இன்ஸ்பெட்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்தான் பீகாரின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர்.

சிறுவயதில் மான்வி மதுகாஷ்யப்தான் ஒரு திருநங்கை என்று தெரிந்துக்கொண்டதும் சமூகத்தால் பல வேதனைகளுக்கு ஆளாகியிருக்கிறார். பல சிரமங்களுக்கு ஆளாகி வந்துள்ளார்.

இருப்பினும் தற்போது அவர் பெற்றுள்ள வெற்றிக்கு முன், அவர் பட்ட சிரமங்களும் வேதனைகளும் தவிடுபொடியாகிவிட்டது என்கிறார். இந்நிலைக்கு அவர் வருவதற்கு அவரது பெற்றோர்கள் முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார்.

இவருடன் சேர்த்து மேலும் இரு திருநங்கைகளும், ஒரு திருநம்பியும் சப் இன்ஸ்பெக்டர்களாக பீகாரில் பணிபெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!