காலியில் வாடகைக்கு வீடு எடுத்து ‘குஷ்’ கஞ்சா பயிரிட்ட பெலாரஸ் நாட்டவர் கைது

அக்மீமன(Akmeemana) பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட வீட்டில் ‘குஷ்’கஞ்சா பயிரிட்டு வந்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை காலி மாவட்ட குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த வீட்டின் இரண்டு அறைகளில் அவர் கஞ்சா பயிரிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்காக அவர் அந்த செடிகளை பயிரிட்டுள்ளதாக காவல்துறையினர் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த வீடு கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு சொந்தமானது என்றும், சந்தேக நபர் வீட்டை வாடகைக்கு எடுத்து அதற்காக மாத வாடகையாக 1.5 இலட்சம் ரூபாவை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி மாவட்ட குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.
(Visited 4 times, 1 visits today)