பங்களாதேஷின் புதிய பிரதமர் 17 ஆம் திகதி பதவியேற்பு: 13 நாடுகளுக்கு அழைப்பு!
பங்களாதேஷின் புதிய பிரதமராக பி.என்.பி. BNP கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் tarique rahman நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (17) பதவியேற்கவுள்ளார்.
நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இலங்கை, சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மலேசியா, புருனே, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய 13 நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இதற்குரிய அழைப்பை விடுத்துள்ளது என தெரியவருகின்றது.
2024 இல் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு பங்களாதேஷில் முதல்முறையாக கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடந்தது.
இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி மொத்தம் உள்ள 300 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றியது.





