ஆசியா செய்தி

நாட்டை விட்டு வெளியேற முயன்ற வங்கதேச முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கைது

பங்களாதேஷின் முன்னாள் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் Zunaid Ahmed Palak நாட்டை விட்டு வெளியேற முயன்ற போது டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட நாட்டில் இடைக்கால அரசாங்கத்தை அமைத்த இராணுவம், பிரதமர் ஷேக் ஹசீனாவை வெளியேற்றப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டார்.

சுனைட் அகமது, ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தின் VIP இடத்தில் காத்திருந்தபோது விமான நிலைய அதிகாரிகள் அவரை அணுகினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் விமானப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மேலும் இவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!