செய்தி

இலங்கையில் மோசமான வானிலை – கொழும்பில் கடும் நெருக்கடி நிலை

இலங்கையில் மோசமான வானிலை காரணமாக கொழும்பு ஆர்.ஏ. டிமெல் அவென்யூவில் மற்றொரு மரம் விழுந்துள்ளது.

இதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசபலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை குறித்த மரம் கார் மற்றும் முச்சக்கரவண்டி மீது விழுந்ததில், பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி கொழும்பு ஆர்.ஏ. டிமெல் அவென்யூவில் பேருந்து மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும், அக்டோபர் 30 ஆம் திகதி அதே வீதியில் மற்றொரு மரம் விழுந்ததில் 3 வாகனங்கள் சேதமடைந்தன. இந்த பாதுகாப்பற்ற நிலை குறித்து கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் திருமதி பத்ராணி ஜயவர்தனவிடம் நாம் வினவிய போது,

நேற்றைய மோசமான வானிலை காரணமாக கொழும்பில் 36 மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து வீழ்ந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆபத்தான மரங்களை அடையாளம் காணும் இயந்திரம் கொழும்பு மாநகர சபையிடம் இருந்தாலும் அதனை பயன்படுத்துவதற்கு ஆள் இல்லை என மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content