இலங்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை : 5000 பேர பாதிப்பு!

இலங்கையில் நிலவும் தென்மேற்கு பருவபெயர்ச்சி வானிலை காரணமாக 12 மாவட்டங்களைச் சேர்ந்த 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதன்படி காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, மட்டகளப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகல், நுவரெலியா, வவுனியா, மற்றும் முல்லைத்தீவு, ஆகிய மாவட்டங்களில், 1648 குடும்பங்களைச் சேர்ந்த 5994 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மாவட்டங்களில் 200இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு பருவபெயர்ச்சி காலநிலையின் இரண்டாம் கட்டம் தற்போது நடைபெற்று வருவதாகவும், பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலையே நிலவும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!