ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா-பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்ற இந்திய வம்சாவளி எம்.பி.

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வருண் கோஷ். இவர் தனது 17வது வயதில் பெற்றோருடன் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறினார். அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வந்த வருண் கோஷ், பின்னர் ஆஸ்திரேலியாவின் தொழிலாளர் கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார்.

இந்த நிலையில் வருண் கோஷை நாடாளுமன்றத்தின் உறுப்பினராக தேர்வு செய்ய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து வருண் கோஷ், இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்.

இதன் மூலம் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்த முதல் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை வருண் கோஷ் பெற்றுள்ளார். புதிய எம்.பி.யாக பதவியேற்றுள்ள வருண் கோஷிற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் மற்றும் சக எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!