தென் அமெரிக்கா

பொலிவியாவில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அரண்மனைக்குள் நுழைந்து அங்கு ஆட்சியைப் பிடித்த கிளர்ச்சிக் குழுவின் இராணுவத் தளபதி ஜெனரல் ஜுவான் ஜோஸ் ஜூனிகா பொலிவியன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் மூலம் அது நிகழ்ந்தது.

நாட்டின் தலைநகரில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் திடீரென ஆயுதம் ஏந்திய வாகனங்களும், ராணுவ வீரர்களும் புகுந்து அங்கு ஆட்சியைக் கைப்பற்றினர்.

அங்கு பேசிய கிளர்ச்சி இராணுவத் தலைவர், ஜனநாயகத்தை மறுசீரமைக்க விரும்புவதாகக் கூறினார்.

அவர் கைது செய்யப்பட்டதையடுத்து, ராணுவ வீரர்கள் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறினர்.

பொலிவியாவின் முன்னாள் இராணுவத் தலைவர் ஜெனரல் ஜுவான் ஜோஸ் ஜூனிகா, பொலிவியாவின் முன்னாள் தலைவர் ஈவோ மொரேல்ஸை பகிரங்கமாக விமர்சித்ததை அடுத்து கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

(Visited 45 times, 1 visits today)

SR

About Author

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த