தேர்தல் நேரத்தில் மகளிர் மீது ஆளும் கட்சி தாக்குதல் – விஜய் கண்டனம்
மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, சகோதரி ஒருவரது வீட்டின் சுவரில் அவரது அனுமதியின்றித் தங்களது கட்சிக்கான ஸ்டிக்கர்களை காட்சிப்படுத்தியதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த, மற்றுமொரு சகோதரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.
மகளிர் மீதான இந்தத் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் விஜய் பதிவிட்டுள்ளார்.
வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளி நிலையில் ஆளும் கட்சி பொதுமக்களை அவர்கள் அச்சுறுத்தி வருவதாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குற்றம் சுமத்தியுள்ளார்.





