அரசியல் இலங்கை செய்தி

சிறிதரனின் கதிரைக்காக சபையில் அர்ச்சுனா சண்டை!

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக இரா. சாணக்கியன் Chanakyan நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிதரன் Siridaran எம்.பிக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அர்ச்சுனா எம்.பி. Arjuna கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அர்ச்சுனா எம்.பி.,

“எதிர்க்கட்சி தலைவர் மற்றும் கட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கே எதிரணியில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படும்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்படியானால் சிறிதரனுக்கு எந்த அடிப்படையில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட உறுப்பினருக்கு அந்த இடம் வழங்கப்பட வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர்,

“எதிரணியில் உள்ளி சிரேஷ்ட உறுப்பினர்தான் சிறிதரன். உறுப்பினர்களுக்கு ஆசனம் ஒதுக்கும் உரிமை எனக்கு உள்ளது.” என்று குறிப்பிட்டார்.

அதன்பின்னர் ஒழுங்குப் பிரச்சினையொன்றi எழுப்பிய சாணக்கியன் எம்.பி.,

“எமது கட்சிக்குரிய ஆசனங்களைப் பற்றி நாம் பார்த்துக்கொள்கின்றோம்.

எமது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இரு ஆசனங்களை நாம் முறையாக பகிர்ந்துள்ளோம். எமது கட்சி விவகாரம் பற்றி அர்ச்சுனா கவலைப்பட வேண்டியதில்லை.” என்று பதிலடி கொடுத்தார்.

 

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!