போரில் ரஷ்யாவின் இன்னொரு மூத்த தளபதி பலி

இன்று அதிகாலை உக்ரைன் ஜனாதிபதியின் சொந்த ஊரான Kryvyi Rih மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் வரை உயிரிழந்துள்ளார்கள்.
ரஷ்ய தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தாயிற்று. சாதாரண படைவீரர்கள் முதல் தளபதிகள் வரை பலரை ரஷ்யாவும் இழந்துள்ளது.இந்நிலையில், மூத்த ரஷ்ய தளபதி ஒருவர் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
Major General Sergei Goryachev என்னும் அந்த தளபதி, நேற்று, தெற்கு டோனெட்ஸ்க் பகுதியில் நடந்த பலத்த சண்டையில் பலியாகியுள்ளார்.Goryachev, உக்ரைன் போரில் கொல்லப்படும் ஐந்தாவது மூத்த ரஷ்யத் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)