இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரை தீவைத்து கொலை செய்ய முயற்சி

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி வீதிப் பகுதியில் பெண்ணொருவரை தீ மூட்டி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண்ணை அழைத்து வந்த நபர் ஒருவர் அவரை தீ மூட்டி கொழுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்தை பார்த்த ஊர் மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தீயை அணைத்து குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் மீது தீ மூட்டப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(Visited 15 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை