செய்தி

வரி இல்லை என்றால் அமெரிக்கா முற்றிலுமாக அழிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை

வரிகள் இல்லாமல், ஏற்கனவே பெற்ற டிரில்லியன் கணக்கான டொலர்கள் இல்லாவிட்டால், அமெரிக்கா முற்றிலுமாக அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துளளார்.

உலகின் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி, டிரம்ப் மிக அதிகமாக வரிகளை விதித்தார்.

‘அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி, சர்வதேச நாடுகளுக்கு டிரம்ப் தன் இஷ்டப்படி கூடுதல் வரி விதித்தது சட்டவிரோதமானது’ என, அந்நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது.

இந்த தீர்ப்பினை எதிர்த்து அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தின் உத்தரவை டிரம்ப் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

வரிகள் இல்லாமல், நாம் ஏற்கனவே பெற்ற டிரில்லியன் கணக்கான டொலர்கள் இல்லாவிட்டால், நமது நாடு முற்றிலுமாக அழிக்கப்படும். மேலும் நமது ராணுவ சக்தி உடனடியாக அழிக்கப்படும். தீவிர இடதுசாரி நீதிபதிகள் குழு அதைப் பொருட்படுத்தவில்லை.

ஆனால் ஒபாமா நியமித்த ஒரு ஜனநாயகக் கட்சிக்காரர் உண்மையில் நமது நாட்டைக் காப்பாற்ற ஓட்டளித்தார். அவரது துணிச்சலுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் அமெரிக்காவை நேசிக்கிறார், மதிக்கிறார். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

(Visited 4 times, 4 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி