இந்தியா

விபத்தையடுத்து ஏர் இந்தியா விமான முன்பதிவுகளில் கடும் வீழ்ச்சி!

உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில், தமது பயண அனுமதிச்சீட்டு முன்பதிவு, சுமார் 20 சதவீதத்தினால் குறைந்துள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அஹ்மதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தை அடுத்து, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, உள்நாட்டு வழித்தடங்களில் ஏர் இந்தியா விமான அனுமதி பயணச்சீட்டு முன்பதிவு 10 முதல் 12 சதவீதம் வரையும், சர்வதேச வழித்தடங்களில் ஏர் இந்தியா விமான அனுமதி பயணச்சீட்டு முன்பதிவு 18 முதல் 22 சதவீதம் வரையும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஏர் இந்தியா விமான பயணக்கட்டணம் 8 முதல் 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக, அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன், குறித்த விமான பயணச்சீட்டுக்களை இரத்து செய்வதும் 15 முதல் 18 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக, ஏர் இந்தியா விமான சேவைகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
Skip to content