புதுடெல்லியில் இன்று ஆரம்பமாகும் AI உச்சிமாநாடு!
AI உச்சிமாநாடு புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
05 நாள் இடம்பெறும் இந்த மாநாட்டில் 45 நாடுகளைச் சேர்ந்த 20 உலகத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் அளவிலான பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
AI தொழில்நுட்பத்தால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களைக் குறைப்பதன் மூலம் உலகளாவிய ஒத்துழைப்புக்கான பொதுவான பாதை வரைபடத்தை உருவாக்குவதே இந்த உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
அத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI), குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நெறிமுறை பயன்பாடு ஆகியவற்றால் ஏற்படும் வேலைவாய்ப்பு நெருக்கடி குறித்து இந்த மாநாட்டில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.





