இலங்கை செய்தி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய உறுதிமொழி

புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பிய பின்னர் பெருமையுடன் வாழக்கூடிய சூழல் கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் இன்று இடம்பெற்ற  நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டிற்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தந்த அவர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இது பெரும் பலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில், நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்ச்சித்திட்டம் வடமேற்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், குருநாகல், புத்தளம், அனுராதபுரம், மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களில் இருந்து சுமார் 5,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் நடாத்தப்பட்ட நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ், புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு முன்மொழியப்பட்ட சுயதொழிலை ஆரம்பிக்க தேவையான நிதி மூலதனமாக தலா 50,000 ரூபாவையும் ஜனாதிபதி வழங்கினார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content