இலங்கை

இலங்கை ஜனாதிபதி விடுத்த பணிப்புரை!

முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அரச சேவைகளை தடையின்றி பேணுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் எந்தவித இடையூறும் இன்றி அத்தியாவசிய சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சு போன்ற அத்தியாவசிய வகைகளின் கீழ் வரும் நிறுவனங்கள் கூட்டாக இந்த வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில், நாடு முழுவதும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதை உறுதிப்படுத்தும் வகையிலும் விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!