இந்தியா செய்தி

விபத்தில் உயிரிழந்த ரசிகர் மன்ற தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்திய நடிகர் சூர்யா

விழுப்புரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த சூர்யா ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் மணிகண்டன் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சூர்யா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

விழுப்புரத்தில் கடந்த ஆறாம் தேதி மாலை புதிய பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற விழுப்புரம் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவரும், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியருமாண மணிகண்டன் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு ஏழாம் தேதி மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் உயிரிழந்த மணிகண்டன் வீட்டிற்கு சென்ற நடிகர் சூர்யா, மணிகண்டனின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா நிதி உதவியும் வழங்கியுள்ளார். உயிரிழந்த ரசிகர் மன்ற மாவட்ட தலைவரின் வீட்டிற்கு சென்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, நிதி உதவி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!