ஜெர்மனியில் A11 நெடுஞ்சாலையில் விபத்து : இருவர் பலி, பலர் படுகாயம்!

ஜெர்மனியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் நடந்த பேருந்து விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
பெர்லினுக்கு வடகிழக்கே உள்ள பிரென்ஸ்லாவ் அருகே A11 நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறும் இடத்தில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
விபத்தில் 29 வயது பெண் மற்றும் 48 வயதுடைய ஆண் என இருவர் பலியாகியுள்ளனர்.
விபத்துக்கான காரணம் அறியப்படவில்லை. பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
(Visited 17 times, 1 visits today)